அவர் வேறு எங்கும் செல்லவில்லை: சுவேந்து அதிகாரியின் ராஜினாமா குறித்து திரிணமூல் எம்.பி.நம்பிக்கை
சனி, 28 நவம்பர், 2020
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் இருந்து சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவர் கட்சியைவிட்டு வேறு எங்கும் செல்ல மாட்டார் என திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்.பி. சவுகாதா ராய் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றி வந்த சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அவரது போக்குவரத்து மற்றும் நீர்ப்பாசன துறைகள் மம்தா பானர்ஜி கைவசம் வந்தன.
source https://www.hindutamil.in/news/india/606113-adhikari-did-not-resign-from-the-party-yet-and-he-is-not-flying-to-delhi-either.html?frm=rss_more_article