உத்தர பிரதேசம், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்களில் அகிலேஷ், மம்தா பானர்ஜியுடன் கூட்டணி வைக்க ஒவைஸி விருப்பம்
பிஹாரில் முஸ்லிம் வாக்குகள் பிரிந்தமையால் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. இதேபோன்ற நிலை மேற்கு வங்கம், உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் ஏற்படாமல் இருக்க அகிலேஷ் சிங் யாதவ், மம்தா பானர்ஜியுடன் கூட்டணி வைக்க அசாதுதீன் ஒவைஸி கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் முடிந்த பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் 16 தொகுதிகள் வித்தியாசத்தில் தேசிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றிருந்தது. இதன் பின்னணியில் ஐதராபாத் எம்.பி.யான ஒவைஸியின் அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாஹாதுல் முஸ்லிமீன்(ஏஐஎம்எம்ஐஎம்) கட்சியால் பிரிந்த முஸ்லிம் வாக்குகள் காரணமாகப் பேசப்படுகிறது. இக்கட்சி அடுத்து தேர்தல் வரவிருக்கும் மேற்கு வங்கம், உத்தர பிரதேச மாநிலங்களிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. இதனால், அவ்விரண்டு மாநிலங்களிலும் பிஹாரை போல் முஸ்லிம் வாக்குகள் பிரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source https://www.hindutamil.in/news/india/605399-owaisi.html?frm=rss_more_article