கரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிச.4-ல் புனே பயணம்
வியாழன், 26 நவம்பர், 2020
கரோனா தடுப்பூசியை பெறுவது தொடர்பாக 100 நாடுகளின் தூதர்கள், பிரதிநிதிகள் மகாராஷ்டிராவின் புனே நகருக்கு வரும் டிசம்பர் 4-ம் தேதி செல்கின்றனர்.
இந்தியாவில் 7 மருந்து நிறுவனங்கள் கரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்து வருகின்றன. இதில் மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த செரம் இன்ஸ்டிடியூட் முன்வரிசையில் உள்ளது. பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியை செரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் பரிசோதித்து, உற்பத்தி செய்து வருகிறது.
source https://www.hindutamil.in/news/india/605396-covid-vaccine.html?frm=rss_more_article