நிதிஷ் ஆட்சியைக் கவிழ்க்க சிறையில் இருந்துகொண்டே லாலு பிரசாத் யாதவ் சதி: சுஷில் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு
புதன், 25 நவம்பர், 2020
ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருந்தாலும் நிதிஷ் ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பாஜகவின் மூத்த தலைவர் சுஷில் மோடி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
பிஹாரில் கடந்த நவம்பர் 16 அன்று முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மாநில அரசு பதவியேற்றது. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று நாட்களே ஆன நிலையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த கல்வி அமைச்சர் எதிர்க்கட்சிகள் தெரிவித்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக ராஜினாமா செய்தார்.
source https://www.hindutamil.in/news/india/605096-lalu-prasad-yadav-trying-to-poach-nda-mlas-in-bihar-alleges-sushil-modi.html?frm=rss_more_article