ராஜிவ் காந்தி காலம் முதல் சோனியா காந்தி காலம் வரை மிகவும் பக்க பலமாக விளங்கிய மூத்த தலைவர் அகமது படேல் இழப்பை சமாளிக்குமா காங்கிரஸ்?
வெள்ளி, 27 நவம்பர், 2020
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் காலம் முதல் காங்கிரஸின் முக்கியப் பின்புலமாக இருந்தவர் அகமது படேல். இவரது மறைவு, ஏற்கனவே பல்வேறு வகைகளிலான தொடர் தோல்வியால் அல்லாடும் கட்சியை பலப்படுத்த முடியாத நிலையை உருவாக்கி உள்ளது.
குஜராத்தின் பரூச்சை சேர்ந்த அகமது பாய் முகம்மதுபாய் படேல் எனும் அகமது படேல் (71). மாநிலம் சார்பில் தொடர்ந்து 8 முறை
நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்தார். தம் கட்சி தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான அகமது படேல், கரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் காலமானார். இளைஞர் காங்கிரஸின் தீவிர தொண்டரான படேல் முதல் முறையாக பரூச்சின் 1976-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்ற போது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்தை கவர்ந்தார்.
source https://www.hindutamil.in/news/india/605554-ahamed-patel.html?frm=rss_more_article