இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் 85 லட்சத்தை நெருங்குகின்றனர்: உயிரிழப்பு 550 மேல் அதிகரிப்பு
சனி, 21 நவம்பர், 2020
இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90.50 லட்சத்தைக் கடந்துள்ளது. நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 85 லட்சத்தை நெருங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46 ஆயிரத்து 232 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 90 லட்சத்து 50 ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது.
source https://www.hindutamil.in/news/india/603772-46-232-new-covid-19-cases-in-india-tally-reaches-90-50-lakh-death-toll-mounts-to-1-32-726.html?frm=rss_more_article