நிவர் புயலால் ஆந்திராவில் 5 மாவட்டங்களில் தொடர் மழை- திருப்பதி நடைபாதை தற்காலிகமாக மூடல்
வெள்ளி, 27 நவம்பர், 2020
ஆந்திராவில் சித்தூர், நெல்லூர்,கடப்பா, குண்டூர், பிரகாசம்ஆகிய 5 மாவட்டங்களை நிவர் புயல் புரட்டிப்போட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களிலும் கடந்த2 நாட்களாக பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பின. மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
பல கிராமங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியுடன் நேற்று காலை முதல் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
source https://www.hindutamil.in/news/india/605737-nivar-cyclone.html?frm=rss_more_article