நுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகம்: டிச.3-ல் மாணவர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துரையாடல்
சனி, 28 நவம்பர், 2020
நுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகங்களைப் போக்க டிச.3 ஆம் தேதி மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். இணையவழியில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மத்தியக் கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமை தாங்கினார். இதில் துறைச் செயலாளர்கள் அமித் கரே, அனிதா கர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
source https://www.hindutamil.in/news/vetrikodi/news/606121-educationministergoeslive-ramesh-pokhriyal-to-interact-with-students-live-on-december-3.html?frm=rss_more_article