தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஒருவருக்குக் கரோனா தொற்று; 2 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்: இங்கி. தொடருக்கு முன்பாக சிக்கல்
வியாழன், 19 நவம்பர், 2020
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்குக் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வீரருடன் நெருங்கிய தொடரில் இருந்த இரு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள், டி20 தொடருக்கு முன்பாக பயோ-பபுள் சூழலை உருவாக்கும் வகையில் வீரர்களிடையே பரிசோதனை நடத்தப்பட்டபோது கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஆனால், பாதிக்கப்பட்ட அந்த வீரர் யார், தனிமைப்படுத்தப்பட்ட இரு வீரர்கள் யார் எனும் விவரத்தை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட மறுத்துவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்