சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பின்படி பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்: விரைவில் வெளியே கொண்டுவர வழக்கறிஞர்கள் தீவிரம்
வியாழன், 19 நவம்பர், 2020
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி சசிகலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் ரூபாயை பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான ரூ.66.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கைவிசாரித்த பெங்களூரு சிறப்புநீதிமன்றம் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி ஜெயலலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியே 1 லட்சம் அபராதமும், சசிகலா, சுதாகரன் உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்தது.
source https://www.hindutamil.in/news/india/602994-sasikala.html?frm=rss_more_article