பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 492 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி பதிலடி; ஜோ ரூட் சாதனை

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 492 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி பதிலடி; ஜோ ரூட் சாதனை

முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 3-வது நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 492 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோர் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்திருந்த முன்னாள் வீரரான அலாஸ்டர் குக்கின் சாதனையை ஜோ ரூட் முறியடித்தார்.

முல்தான் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 149 ஓவர்களில் 556 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் ஷான் மசூத் 151, சல்மான் ஆகா 104, அப்துல்லா ஷபிக் 102 சவுத் ஷகீல் 82 ரன்கள் விளாசினர். இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது. ஸாக் கிராவ்லி 64 ரன்களும், ஜோ ரூட் 32 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel