27 வருடங்களுக்குப் பிறகு இரானி கோப்பையை வென்றது மும்பை
ஞாயிறு, 6 அக்டோபர், 2024
லக்னோ: இரானி கோப்பையை 15-வது முறையாக வென்றது மும்பை அணி. இந்த தொடரில் அந்த அணி 27 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றி உள்ளது.
மும்பை - ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை தொடர் லக்னோவில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 537 ரன்களும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 416 ரன்களும் குவித்தன. 121 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 78 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 329 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்