2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் தடுமாற்றம்: இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை; பரபரப்பான கட்டத்தில் கான்பூர் டெஸ்ட் போட்டி

2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் தடுமாற்றம்: இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை; பரபரப்பான கட்டத்தில் கான்பூர் டெஸ்ட் போட்டி

கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 52 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் 26 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.

கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டி மழை காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டது. 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 3 விக்கெட்கள் இழப்புக்கு 107 ரன்கள் என்ற நிலையில் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 74.2 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முஸ்பிகுர் ரஹிம் 11, லிட்டன் தாஸ் 13, ஷகிப் அல் ஹசன் 9, மெஹிதி ஹசன் 20, தைஜூல் இஸ்லாம் 5, ஹசன் மஹ்மூத் 1, காலித் அகமது ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தபோதிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 13-வது சதத்தை விளாசிய மொமினுல் ஹக் 194 பந்துகளில், ஒரு சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்களையும் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel