2-வது இன்னிங்ஸில் இந்திய அணி போராட்டம்: நியூஸிலாந்து அணி 402 ரன் குவித்து ஆட்டமிழப்பு

2-வது இன்னிங்ஸில் இந்திய அணி போராட்டம்: நியூஸிலாந்து அணி 402 ரன் குவித்து ஆட்டமிழப்பு

பெங்களூரு: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ரச்சின் ரவீந்திரா சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து போராடி வருகிறது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணிமுதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்களில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து சொந்த மண்ணில் மோசமான சாதனையை படைத்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 20, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்கள் சேர்த்தனர். 5 பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்திருந்தனர். நியூஸிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5, வில்லியம் ஓ’ரூர்கி 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel