ஷான் மசூத் 151, அப்துல்லா ஷபிக் 102 ரன் விளாசல்: பாகிஸ்தான் அணி 328 ரன்கள் குவிப்பு

ஷான் மசூத் 151, அப்துல்லா ஷபிக் 102 ரன் விளாசல்: பாகிஸ்தான் அணி 328 ரன்கள் குவிப்பு

முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷான் மசூத் 151 ரன்களும், தொடக்க வீரரான அப்துல்லா ஷபிக் 102 ரன்களும் விளாசினர்.

முல்தான் நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரரான சைம் அயூப் 4 ரன்கள் எடுத்த நிலயில் கஸ் அட்கின்சன் பந்தில் விக்கெட் கீப்பர் ஜெமி ஸ்மித்திடம் பிடிகொடுத்து வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத், அப்துல்லா ஷிபிக்குடன் இணைந்து பார்ட்னர் ஷிப்பை கட்டமைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel