செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதனை: குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு பாராட்டு
சனி, 28 செப்டம்பர், 2024
சென்னை: ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் சமீபத்தில் முடிவடைந்த 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணியும், மகளிர் அணியும் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தது.
இதில் இந்திய ஆடவர் அணியில் சென்னையை சேர்ந்த டி.குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோரும் மகளிர் பிரிவில் வைஷாலியும் இடம் பெற்று இருந்தனர். மேலும் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீநாத் நாராயணன், ஆடவர் அணிக்கு கேப்டனாகவும், அர்ஜூன் கல்யாண் மகளிர் அணிக்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்