செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து

சென்னை: ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வரும்45-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி 2 பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி: உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொது மற்றும் மகளிர் பிரிவுகளில்தங்கம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த சாதனை இந்திய சதுரங்க அணிக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் மைக்கல்லாக அமையும். நமது விளையாட்டு வீரர்களின் உத்வேகம் ஒவ்வொரு இந்தியரிடமும் மகத்தான உணர்வை விதைத்துள்ளது. இதனால் பாரதம் ஓர் ஆற்றல்மிக்க விளையாட்டு வல்லரசாக உயர்ந்து பிரதிபலிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel