ஆஸி. அணியின் கேப்டன் பொறுப்பு குறித்து மனம் திறந்த வார்னர்

ஆஸி. அணியின் கேப்டன் பொறுப்பு குறித்து மனம் திறந்த வார்னர்

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பு குறித்து டேவிட் வார்னர் மனம் திறந்துள்ளார். அண்மையில் அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட்டில் தனது ஓய்வை அறிவித்திருந்தார். அதையடுத்து அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், வார்னர் அது குறித்து பேசியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 96 டெஸ்ட், 138 ஒருநாள் மற்றும் 91 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 16300 ரன்களை குவித்துள்ளார். இருப்பினும் களத்தில் அவர் செய்த குற்றத்திற்காக அணியை தலைமை தாங்கும் கேப்டன் பொறுப்பை அவர் வகிக்க வாழ்நாள் தடை விதித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். அந்த தடையை நீக்க வேண்டும் என்று ஆலன் பார்டர் காட்டமாக தெரிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel