சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இந்தியாவின் கர்மான் கவுர் முதல் சுற்றில் வெற்றி
செவ்வாய், 13 செப்டம்பர், 2022
சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு இந்தியாவின் கர்மான் கவுர், கனடாவின் யுஜின் பவுச்சார்டு முன்னேறினர்.
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஒற்றையர் பிரிவில் வைல்டு கார்டு வீராங்கனையான கனடாவின் யுஜின் பவுச்சார்டு 167-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் ஜோனா ஜூகரை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டில் ஜோனா ஜூகர் கடும் சவால் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்