ஐஎஸ்எல் கால்பந்து தொடர் - அக்.7-ல் தொடக்கம்

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் - அக்.7-ல் தொடக்கம்

மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 9-வது சீசன் வரும் அக்டோபர் 7-ம் தேதி கொச்சியில் தொடங்குகிறது. 11 அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரானது 117 ஆட்டங்களுடன் சுமார் 5 மாதங்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் மற்றஅணிகளுடன் தலா இரு முறை மோதும். அந்தவகையில் ஒவ்வொரு அணியும் 20 ஆட்டங்களில் மோதுகின்றன. தொடக்க நாளில் கேரளா – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன. சென்னையின் எப்சி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 10-ம் தேதி ஏடிகே மோகன் பகானுடன் மோதுகிறது.

லீக் ஆட்டங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ல் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து மார்ச் மாதம் பிளேஆஃப், அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இம்முறை பிளே ஆஃப் சுற்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. லீக் சுற்றில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும்.3 முதல் 6-வது இடத்தை பிடிக்கும் 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றில் மோதும். இதில் இரு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel