ஆசிய கோப்பை | த்ரில் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை தகுதி
வெள்ளி, 2 செப்டம்பர், 2022
ஆசிய கோப்பை டி20 தொடரின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இரு அணிகளும் தங்களின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்த இன்றைய போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணிக்கு எந்த வீரரும் 50+ ஸ்கோர் எடுக்காவிட்டால் மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் அஃபிஃப் ஹொசைன் ஆகியோரின் உதவியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அஃபிஃப் ஹொசைன் 39 ரன்களும், மெஹிதி ஹசன் மிராஸ் 38 ரன்களும் எடுத்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்