ஆசிய கோப்பை ஃபைனல் | சரிவிலிருந்து இலங்கையை மீட்ட ராஜபக்சே: 171 ரன்களை விரட்டும் பாகிஸ்தான்
திங்கள், 12 செப்டம்பர், 2022
துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 170 ரன்களை குவித்துள்ளது. பாகிஸ்தான் அணி இலக்கை இப்போது விரட்டி வருகிறது.
துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பையின் ஃபைனலில் விளையாடி வருகின்றனர். இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்து ஃபைனலுக்கு முன்னேறின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட் செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்