செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வளைகாப்பு விழா கூட நடத்தவில்லை - மனம் திறக்கிறார் பதக்கம் வென்ற ஹரிகா

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வளைகாப்பு விழா கூட நடத்தவில்லை - மனம் திறக்கிறார் பதக்கம் வென்ற ஹரிகா

சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஏ மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய மகளிர் அணி முதன்முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்ததில் நிறைமாத கர்ப்பிணியான கிராண்ட் மாஸ்டர் ஹரிகா துரோணவல்லி முக்கிய பங்காற்றியிருந்தார். இதன் மூலம் விளையாட்டு உலகில், கர்ப்ப காலங்களில் பங்கேற்று சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய நட்சத்திரங்களின் வரிசையில் இணைந்துள்ளார் ஹரிகா.

குழந்தை பிறப்பை எதிர்நோக்கியுள்ள 31 வயதான ஹரிகா, சொந்த நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இந்தத் தொடரில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்ற தனது நீண்டகால கனவை நனவாக்கினார். ஹரிகாவின் மன உறுதி மற்றும் அவரது குடும்பத்தினர், சக வீரர்கள் மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஆகியவை அளித்த ஆதரவும் பலனளித்தது. 7 சுற்றுகளில் விளையாடிய ஹரிகா ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காமல் அனைத்தையும் டிரா செய்து இந்திய அணிக்கு பெரிதும் உதவியிருந்தார். கடைசி இரு சுற்றுகளில் மட்டும் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel