காமன்வெல்த் விளையாட்டு ஸ்டீப்பிள்சேஸில் கென்யா ஆதிக்கம் உடைந்தது எப்படி? - மனம்திறக்கும் அவினாஷ்

காமன்வெல்த் விளையாட்டு ஸ்டீப்பிள்சேஸில் கென்யா ஆதிக்கம் உடைந்தது எப்படி? - மனம்திறக்கும் அவினாஷ்

காமன்வெல்த் விளையாட்டில் ஸ்டீப்பிள்சேஸில் கடந்த 1990-ஆண்டு முதல் கென்ய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். 1990, 1994ம் ஆண்டு போட்டிகளில் முதல் இரு இடங்களை கைப்பற்றிய இவர்கள் அதன் பின்னர் 5 முறை நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டிலும் தங்கம், வெள்ளி, வெண்கலம்என 3 பதக்கங்களையும் மொத்தமாக அள்ளினர். இவர்களது ஆதிக்கத்தைத்தான் அசைத்து பார்த்துள்ளார் அவினாஷ்.

பர்மிங்காமில் கடைசி 100 மீட்டர் வரை அவினாஷுக்கு முன்னாள் கொர்னேலியஸ் கிப்ருடோ, அமோஸ் சீரம், ஆபிரகாம் கிபிவோட் ஆகிய 3 கென்யவீரர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு தடையை தாண்டும் போது 4-வது நபராக துள்ளிப் பாய்ந்தார் அவினாஷ். ஒவ்வொரு கென்ய வீரரையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறியபடி சென்ற அவினாஷ், ஆபிரகாம் கிபிவோட்டுக்கு சிறிது பயத்தைக் காட்டினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel