உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் | 2-ம் நிலை வீரரை வீழ்த்தினார் பிரனாய்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் | 2-ம் நிலை வீரரை வீழ்த்தினார் பிரனாய்

டோக்கியோ: உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், உலகின் 2-ம் நிலை வீரரான ஜப்பானின் கென்டோ மொமோட்டாவை தோற்கடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஸ்பெயினின் லூயிஸ் பெனால் வரை எதிர்த்து விளையாடினார். 72 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான லக்சயா சென் 21-17, 21-10 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel