ஜெயலலிதாவின் தனிப்பட்ட உரிமைக்காகவே அறையில் சிசிடிவி கேமராக்களை அகற்றினோம்: உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் வாதம்
புதன், 27 அக்டோபர், 2021
ஜெயலலிதாவின் தனிப்பட்ட உரிமையைக் கருத்தில் கொண்டுதான் அவர் சிகிச்சை பெற்ற அறையில் இருந்த சிசிடிவி கேமராக்களை, அதுவும் அதிகாரிகள் அகற்றச்சொன்னதால்தான் அகற்றினோம் என்று உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு 2019-ம் ஆண்டு முதல் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி ஆணையம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
source https://www.hindutamil.in/news/india/731022-we-removed-the-cctv-cameras-in-the-room-for-jayalalithaa-privacy-apollo-hospital-to-supreme-court.html?frm=rss_more_article