உ.பி.யில் சிறுவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர்

உ.பி.யில் சிறுவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர்

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின்போது, மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது சக மாணவனை கடித்த சோனு யாதவ் என்ற 2-ம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா அழைத்து கண்டித்துள்ளார். பிறகு சக மாணவனிடம் மன்னிப்பு கேட்குமாறு சோனுவிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் சோனு மன்னிப்பு கேட்காததால் ஆத்திர மடைந்த தலைமை ஆசிரியர் அச்சிறுவனை தரதரவென்று பள்ளி மேல் தளத்துக்கு இழுத்துச் சென்றார்.



source https://www.hindutamil.in/news/india/732322-up-school-principal-hanging-kid-upside-down-from-building.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel