முல்லை பெரியாறு அணையில் அதிகபட்சம் எவ்வளவு நீரை தேக்க முடியும்?- இரு மாநில அரசுகளுடன் ஆலோசித்து விரைவாக முடிவு எடுக்க வேண்டும்: அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய், 26 அக்டோபர், 2021
கேரளாவில் பெய்து வரும் கனமழையை கருத்தில் கொண்டு முல்லை பெரியாறு அணையில் அதிகபட்சமாக எவ்வளவு நீரை தேக்க முடியும் என்பது குறித்து இருமாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து விரைவாக முடிவு எடுக்குமாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழகத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது. பெரியாறு அணையின் நீர்மட்டத்தை பராமரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது.
source https://www.hindutamil.in/news/india/730586-sc-directs-panel-to-specify-maximum-water-level-at-mullaperiyar-dam.html?frm=rss_more_article