அயோத்தி ராமர் கோயிலுக்காக இலங்கை அசோக வனத்தின் கல், செடிகள் ஒப்படைப்பு
சனி, 30 அக்டோபர், 2021
இலங்கையின் அசோக வனத்தி லிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்காக கொண்டு வரப்பட்ட கல் மற்றும் செடி அதன் அறக்கட்டளை தலைவரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ராமர் கோயில் கட்டப்படுகிறது. இந்நிலையில் இலங்கை மன்னன் ராவணன், அசோக வனத்தில் சீதையை சிறை வைத்திருந்ததாக ராமாயண காவியத்தில் பதிவாகி உள்ளது. எனவே அசோக வனத்தின் முக்கியத்துவம் கருதி, அங்கிருந்து கல் மற்றும் செடி அயோத்தி ராமர் கோயிலில் பயன்படுத்துவதற்காக அளிக்கப்பட்டுள்ளது.
source https://www.hindutamil.in/news/india/732325-srilankan-stones-and-plants-for-ram-mandir.html?frm=rss_more_article