பெங்களூருவில் 7 பேருக்கு புதிய கரோனா அறிகுறி: மீண்டும் ஊரடங்கு குறித்து அமைச்சர் ஆலோசனை
வியாழன், 28 அக்டோபர், 2021
பெங்களூருவில் புதிய வகைகரோனா ஏ.ஒய்.4.2 வைரஸ் தொற்றுக்கு 7 பேர் ஆளாகியுள்ளதால், மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், கரோனா கட்டுப்பாட்டு குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கரோனா 3வது அலையில் புதிய வகை கரோனா ஏ.ஒய்.4.2 வைரஸ் வெளிநாடுகளில் பரவிவரும் நிலையில், இந்தியாவில் மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா ஆகியமாநிலங்களிலும் இவ்வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட் டுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரஸை காட்டிலும் 6 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
source https://www.hindutamil.in/news/india/731385-new-delta-variant-in-karnataka.html?frm=rss_more_article