கேரளாவில் கரோனாவுக்கு 41 கர்ப்பிணிகள் உயிரிழப்பு: 149 நோயாளிகள் தற்கொலை
வியாழன், 28 அக்டோபர், 2021
கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் அளித்த பதில் வருமாறு:
மாநிலத்தில் இதுவரை 41 கர்ப்பிணி பெண்கள் கரோனா தொற்றுக்கு இறந்துள்ளனர். 149 நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஐசிஎம்ஆர் ஆய்வு அறிக்கையின் படி கேரளாவில் கரோனா நோய் எதிர்ப்பாற்றல் கண்டறியப் பட்டோர் விகிதம் கடந்த 2020, மே, ஆகஸ்ட் மற்றும் டிசம்பரில் முறையே 0.33%, 0.88% மற்றும் 11.6% ஆக இருந்தது. 2021 மே மாதத்தில் 44.4 சதவீதமாக இருந்தது.
source https://www.hindutamil.in/news/india/731380-41-pregnant-women-die-in-corona-in-kerala-149-patients-commit-suicide.html?frm=rss_more_article