முகக்கவசம் அணியாதவர்கள் கரோனா சிகிச்சை மையத்தில் கட்டாயம் பணி செய்ய வேண்டும்: குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன், 3 டிசம்பர், 2020
முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்கள் கரோனா சிகிச்சை மையத்தில் கட்டாயம் பணி செய்ய வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைகட்டுப்படுத்தும் நோக்கில் குஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணிந்துதான் வெளியே வர வேண்டும் என்று மாநில சுகாதாரத் துறை அறிவித்து அதைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால் சுகாதாரத் துறைஉத்தரவையும் மீறி சிலர் பொதுவெளியில் முகக்கவசம் இன்றிநடமாடி வருகின்றனர். இவ்வாறுபொது இடங்களில் முகக்கவசம் இன்றி அதிகம் பேர் நடமாடுவதை சுட்டிக்காட்டி குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன.
source https://www.hindutamil.in/news/india/607721-corona-mask.html?frm=rss_more_article