மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் தொடர்பான வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம்: மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள்
வெள்ளி, 18 டிசம்பர், 2020
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதிகளில் நேற்று 22-வது நாளாக போராட்டம் நடத்தினர். இதன்காரணமாக சிங்கு, திக்ரி, காஜிபூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்லியில் நுழைய லம்பூர், சோபியாபாத் உள்ளிட்ட மாற்றுப் பாதைகளை பொதுமக்கள் பயன்படுத்தினர். எனினும் மாற்றுப் பாதைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
source https://www.hindutamil.in/news/india/612960-farmers-protest.html?frm=rss_more_article