கரோனா நோயாளி வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படுவதால் அவமரியாதையாக நடத்தப்படும் அவலம்: உச்ச நீதிமன்றம் வேதனை
புதன், 2 டிசம்பர், 2020
கரோனா நோயாளிகளின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படுவதால் அவர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா நோயாளிகளின் வீடுகளில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. இந்த நடைமுறையை எதிர்த்து டெல்லியை சேர்ந்த குஷ் கல்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
source https://www.hindutamil.in/news/india/607373-supreme-court.html?frm=rss_more_article