விளையாட்டாய் சில கதைகள்: ஒலிம்பிக்கில் பெண்கள் நுழைந்த கதை
ஞாயிறு, 13 டிசம்பர், 2020
ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பட்டையைக் கிளப்பி வருவதைப் பார்த்து வருகிறோம். ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட அவர்களுக்கு அனுமதி கொடுக்கவே நீண்ட காலம் ஆனது என்பது உங்களுக்கு தெரியுமா?
பண்டைய காலத்தில் ஒலிம்பிக் கொடிகட்டிப் பறந்தபோதே, இதில் ஆட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்களால் வளர்க்கப்பட்ட குதிரைகள் மட்டும் குதிரையேற்ற போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. அப்போதுகூட பெண்களால் வளர்க்கப்பட்ட குதிரைகள் வெற்றி பெற்றால், அவர்கள் நேரடியாக மேடைக்கு சென்று பதக்கத்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்