கருணை அடிப்படையில் வேலை; திருமணமான மகளுக்கும் உரிமை: பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன், 17 டிசம்பர், 2020
திருமணமான மகளுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு என்று பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த தலைமைக் காவலர் கஷ்மீர் சிங் கடந்த 2008-ம் ஆண்டு பணியில் இருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, கருணை அடிப்படையில் தங்களது ஒரே மகளானஅமர்ஜித்துக்கு குமாஸ்தா அல்லது கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணி வழங்கக்கோரி கஷ்மீர் சிங்கின் மனைவி ஜஸ்பிர் கவுர் போலீஸ் துறையில் மனு அளித்தார். ஆனால், அமர்ஜித் ஏற்கெனவே திருமணமானவர் என்பதால் கருணை அடிப்படையில் அவருக்கு வேலை வழங்க சட்டத்தில் இடம் இல்லை எனக் கூறி அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
source https://www.hindutamil.in/news/india/612585-haryana-high-court.html?frm=rss_more_article