விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு ஏற்படும்: வெங்கய்ய நாயுடு நம்பிக்கை

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு ஏற்படும்: வெங்கய்ய நாயுடு நம்பிக்கை

அரசும், விவசாயிகளும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதால், விவசாயிகள் எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான, நியாயமான தீர்வு ஏற்படும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் உள்ள சுவர்ண பாரத் அறக்கட்டளையில் ரைத்து நேஸ்தம், முப்பாவரப்பு ஃபவுண்டேசன் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய நாயுடு, போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் அவர்களுக்கு மத்திய அரசின் பிரதிநிதிகள் அளித்த பதில் குறித்த ஊடக செய்திகளைக் குறிப்பிட்டு, தீர்வுக்கான சாத்தியங்கள் இருப்பதாகக் கூறினார்.



source https://www.hindutamil.in/news/india/612612-venkaiah-naidu.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel