அனைத்து காவல் நிலையங்கள் சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை அலுவலகங்களில் சிசிடிவி கேமரா- உச்ச நீதிமன்றம் உத்தரவு
வியாழன், 3 டிசம்பர், 2020
பஞ்சாப் மாநிலத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரோஹிண்டன் நாரிமன், அனிருத்தா போஸ் அமர்வு விசாரித்து நேற்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையங்கள், சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), அமலாக்கத் துறை, தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை, நிதி புலனாய்வு துறை,தீவிர மோசடிகளை விசாரிக்கும்புலனாய்வு குழு (எஸ்எப்ஐஓ)மற்றும் இதர புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களை கண்டிப்பாக பொருத்த வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
source https://www.hindutamil.in/news/india/607716-cctv.html?frm=rss_more_article