கரோனா பரவல்: குருவாயூர் கிருஷ்ணன் கோயில் மூடப்பட்டது: இரு வாரங்களுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை
சனி, 12 டிசம்பர், 2020
கேரள மாநிலத்தில் , புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயில் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் 14 நாட்களுக்கு மூடப்படுகிறது. இரு வாரங்களுக்கு பக்தர்கள் யாருக்கும் அனுமதியில்லை என்று திருச்சூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
குருவாயூர் தேவஸம்போர்டில் பணியாற்றும் 153 ஊழியர்களுக்கு நேற்று நடத்தப்பட்ட ஆன்ட்டிஜென் பரிசோதனையில் 22 பேருக்கு கரோனா இருப்பது உறுதியானதையடுத்து, கோயிலை மூடும் முடிவை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
source https://www.hindutamil.in/news/india/610966-covid-spread-guruvayur-temple-to-be-closed-for-devotees-for-two-weeks.html?frm=rss_more_article