சீனா தயாரித்த உளவு விமானங்களை பயன்படுத்தி வரும் பாகிஸ்தான்: உளவுத் துறை அதிர்ச்சித் தகவல்
புதன், 2 டிசம்பர், 2020
பாகிஸ்தானின் புதிய ஆயுதமாக சீனாவில் தயாரிக்கப்பட்ட உளவு விமானங்கள் உள்ளதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.
காஷ்மீரின் ஜம்மு மாவட்டம் ஆர்னியா பகுதியில் உள்ள சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் 2 நாட்களுக்கு முன்பு பறந்து வந்துள்ளது. இதைப் பார்த்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் (பிஎஸ்எப்) உளவு விமானத்தை நோக்கி சில முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, அந்த விமானம் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் பிஎஸ்எப் ஐஜி என்.எஸ்.ஜம்வால் தெரிவித்திருந்தார்.
source https://www.hindutamil.in/news/india/607390-pakistan.html?frm=rss_more_article