ஜன்தன், பண பரிவர்த்தனையால் ஏடிஎம்.களின் பயன்பாடு அதிகரிப்பு
செவ்வாய், 1 டிசம்பர், 2020
மத்திய அரசின் ஜன்தன் கணக்கு மற்றும் அரசின் நேரடி பண பரிமாற்றம் (டிபிடி) ஆகியவை காரணமாக கிராமப் பகுதிகளில் ஏடிஎம்.களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் இயங்கும் ஏடிஎம்.கள் கூட அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் 2 சதவீத அளவுக்கு பயன்படுத்தப்பட்ட ஏடிஎம்.கள் தற்போது 12 சதவீத அளவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் டெபிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. செப்டம்பர் 2020 நிலவரப்படி டெபிட் கார்டு பயன்படுத்துவோர் 86 கோடியாகும். இவற்றில் பிரதமரின் ஜன்தன் கணக்குக்கு வழங்கப்பட்ட ரூபே கார்டுகளின் அளவு 35 சதவீதம். அதாவது 30 கோடி கார்டுகள் புழக்கத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
source https://www.hindutamil.in/news/india/607064-atm-usage.html?frm=rss_more_article