கேரள நடிகை கடத்தல் வழக்கு விசாரணை: நீதிமன்ற நீதிபதியை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி
புதன், 16 டிசம்பர், 2020
கேரள நடிகை கடத்தப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் பெண் நீதிபதியை மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில், நடிகர் திலீப் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது திலீப் ஜாமீனில் உள்ளார்.
source https://www.hindutamil.in/news/india/612228-actress-kidnap-case.html?frm=rss_more_article