வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் வலுக்கிறது போராட்டம்; அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை: திட்டமிட்டபடி 8-ம் தேதி பந்த் நடக்கும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் வலுக்கிறது போராட்டம்; அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை: திட்டமிட்டபடி 8-ம் தேதி பந்த் நடக்கும் என விவசாயிகள் அறிவிப்பு

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் வலுத்து வரும் நிலையில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இதனிடையே, மத்திய அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படாத நிலையில், திட்ட மிட்டபடி வரும் 8-ம் தேதி நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடக் கும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடுமுழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய சட்டங்களில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகவும் தங்களுக்கு அரசு வழங்கி வரும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத் தப்பட்டுவிடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.



source https://www.hindutamil.in/news/india/608824-farmers-protest.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel