விவசாயத்தில் முன் அனுபவமே இல்லாமல் காய்கறி பயிரிட்டு மாதம் ரூ.80 லட்சம் வருமானம்: மகாராஷ்டிர ஐஐடி பட்டதாரிகள் சாதனை

விவசாயத்தில் முன் அனுபவமே இல்லாமல் காய்கறி பயிரிட்டு மாதம் ரூ.80 லட்சம் வருமானம்: மகாராஷ்டிர ஐஐடி பட்டதாரிகள் சாதனை

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்கள் மயங்க் குப்தா மற்றும் லலித் ஜாவர்.பாம்பே ஐஐடி.யின் முன்னாள் மாணவர்கள். இருவரும்வேறு வேறு தொழில்களில் இருந்தனர். அவற்றை விட்டுவிட்டு வேளாண் சார்ந்த பணிகளில் ஈடுபட முடிவு செய்தனர். இயற்கை உரங்களால் விளைவிக்கப்படும் (ஆர்கானிக்) வேளாண் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் ஒரு இணையதளத்தை உருவாக்கினர். இந்த முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

காய்கறிகளின் தலைநகராக நாசிக் திகழ்ந்தாலும் இயற்கை உரங்களில் சாகுபடி செய்யும் காய்கறிகளின் வரத்து குறைவாகவே இருந்தது. மேலும் சில காய்கறிகள் மற்றும் பழங்கள் இமாச்சல், பஞ்சாப் போன்ற இடங்களில் மட்டுமே விளையும் என்ற எண்ணமும் பரவலாக இருந்தது.



source https://www.hindutamil.in/news/india/611286-vegetables.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel