ஆஸி.யுடன் பகலிரவு டெஸ்டில் இன்று மோதல்: 7 பேட்ஸ்மேன், 4 பந்து வீச்சாளருடன் களமிறங்கும் இந்திய அணி
வியாழன், 17 டிசம்பர், 2020
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி, அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி 7 பேட்ஸ்மேன்கள், 4 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது.
இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் அடிலெய்டில் இன்று பகலிரவாக தொடங்குகிறது. இது பிங்க் பந்து டெஸ்ட் போட்டியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்துக்கான 11 பேர் கொண்ட இந்திய அணி நேற்றே அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்