கரோனா ஊரடங்கு காலத்தில் இபிஎப் மூலம் 52 லட்சம் பேருக்கு ரூ.13,300 கோடி பட்டுவாடா: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தகவல்
வியாழன், 17 டிசம்பர், 2020
‘‘கரோனா ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களின் நிதித் தேவையை பூர்த்தி செய்ய இபிஎப்ஓ அமைப்பு, 52 லட்சம் சந்தாதாரர்களுக்கு ரூ.13,300 கோடி தொகை அளித்துள்ளது’’ என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார். இவ்விதம் வழங்கப்பட்ட தொகையானது திரும்ப செலுத்த அவசியமில்லாத முன்வைப்புத் தொகையாகும்.
கரோனா ஊரடங்கு காலத்தில் நிதித் தேவையை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி உள்ளிட்டவற்றை கணக்கிட்டு அதில் 3 மாத தொகையை இபிஎப் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ள அனுமதித்தது.
source https://www.hindutamil.in/news/india/612607-minister-santhosh-gangwar.html?frm=rss_more_article