ஐபோன் தொழிற்சாலை தாக்கப்பட்டதால் ரூ.437 கோடி அல்ல, ரூ.52 கோடி மட்டுமே சேதம்
வியாழன், 17 டிசம்பர், 2020
பெங்களூருவை அடுத்துள்ள நரசாப்புராவில் தைவான் நாட்டை சேர்ந்த விஸ்ட்ரான் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டதாகக் கூறி ஊழியர்கள் கடந்த சனிக்கிழமை தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், 150-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலால் ரூ.437 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளதாக தொழிற்சாலை தரப்பில் கூறப்பட்டது.
source https://www.hindutamil.in/news/india/612580-iphone-factory-riot.html?frm=rss_more_article