அமராவதி தலைநகராக நீடிக்க வலியுறுத்தல் நிலம் வழங்கிய விவசாயிகளின் போராட்டம் 365 நாட்களை எட்டியது
வெள்ளி, 18 டிசம்பர், 2020
ஆந்திராவின் தலைநகராக அமராவதியே நீடிக்க வலியுறுத்தி, அதற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 365 நாட்களை எட்டி உள்ளது.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்தபோது, மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி தேர்வு செய்யப்பட்டது. விஜயவாடா-குண்டூர் இடையே, கிருஷ்ணா நதிக்கரையோரம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஜப்பான், சிங்கப்பூர் அரசுகளின் ஒத்துழைப்போடு அமராவதி நகரை உருவாக்க சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
source https://www.hindutamil.in/news/india/612963-farmers-protest-andhra.html?frm=rss_more_article