ஊதியம் குறைவாக வழங்கியதால் ஆத்திரம்; ஐபோன் தயாரிப்பு நிறுவனம் மீது ஊழியர்கள் தாக்குதல்- பெங்களூருவில் 30-க்கும் மேற்பட்டோர் கைது
ஞாயிறு, 13 டிசம்பர், 2020
பெங்களூருவில் ஐபோன் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டதால், ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் நேற்று தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை அடுத்துள்ள நரசாப்புராவில் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் ஐபோன் தொழிற்சாலை இயங்கி வருகிறது. 43 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த தொழிற்சாலையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.
source https://www.hindutamil.in/news/india/611260-iphone-manufacturer-attack.html?frm=rss_more_article