டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாப் உட்பட 3 மாநிலங்களுக்கு தினமும் ரூ. 3,500 கோடி நஷ்டம்
புதன், 16 டிசம்பர், 2020
தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக பஞ்சாப், ஹரியாணா, இமாசலபிரதேச மாநில பொரு ளாதாரத்தில் தினசரி ரூ. 3 ஆயிரம் கோடி முதல் ரூ. 3,500 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக தொழில்துறை கூட்டமைப்பான அசோசேம் தெரி வித்துள்ளது.
சரக்குப் போக்குவரத்து முடங்கி யுள்ளது. பல பொருட்கள் தேங்கியுள் ளன. அதிக நேரமும் கூடுதல் தூர மும் சரக்கு லாரிகள் பயணிக்க வேண்டி யுள்ளது. பஞ்சாப், ஹரியாணா, இமாசலபிரதேச மாநிலங்களில் உள்ள கிடங்குகளிலிருந்து பொருட் களை எடுத்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.
source https://www.hindutamil.in/news/india/612236-farmers-protest.html?frm=rss_more_article